"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவே வகுப்புகள்" - அமைச்சர் செங்கோட்டையன்

0 3659

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் எனவும், அதற்கு 3 சேனல்கள் இதுவரை ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் வகுப்புகள் குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் பிளஸ் - 2 தேர்வெழுதாமல் விடுப்பட்ட மாணவர்களுக்கான தேர்வை 718 பேர் எழுத விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விடுப்பட்ட 34,842 மாணவர்களும் தேர்வெழுத வந்தாலும், அதற்கான ஏற்பாடுகள் செய்து தர அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments